வாதம் பித்தம் சமன் செய்ய:
"துவர்ப்பு சுவைகொண்ட இந்த சூரணம் நம்ம உடல்ல வாதம், கபம், பித்தம் ஆகிய மூனும் சமனில்லாததால வரும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுது.”
ஆன்டி ஆக்ஸிடன்ட்:
“இதில இருக்குற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சாதாரண கிருமித்தொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு எதிர்ப்புசக்தியை தருது. ஒரு ஆய்வுல திரிபலா சூரணம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன்மிக்கதுன்னும், புற்றுசெல்கள் வளரும் அபாயத்தை குறைக்க உதவுவதாவும் கண்டறியப்பட்டிருக்குது.”
செரிமானக் கோளாறுகள் நீங்க:
“செரிமானக் கோளாறுகளால அவதிப்படுறவங்களுக்கு உணவுப்பாதை, குடல் இயக்கம் சீரா செயல்பட இந்த சூரணம் உதவுது.”
மலச்சிக்கல் நீங்க:
“குடலுக்குப் போற உணவுப்பாதையில இருக்குற நச்சுக்களை நீக்கி மலச்சிக்கல் இல்லாம காக்குது. குடல் நச்சுக்களை வெளியேத்தும்போது குடல்ல இருக்குற நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள், கிருமித் தொற்றுகள் போன்றவற்றையும் வெளியேற்ற உதவுது. குடல் சுத்தமே உடல் சுத்தம்ன்னு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க.”
ரத்த சோகை நீங்க:
“ரத்தத்தில் சிவப்பு அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுது. இதனால ரத்த சோகை வராம தடுக்கப்படுது.”
சருமம் பொலிவடைய:
“ரத்தத்தை சுத்தம் செய்றதால சரும பிரச்சனைகள் வராம தடுக்குது. சருமம் இயற்கையாவே பொலிவடைய இந்த சூரணம் உதவுது.”
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க:
“நீரிழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியானு சொல்ற சர்க்கரை நோயாளிகளுக்கு திரிபலா சிறந்த மருந்தா இருக்கும். உடல்ல குளுக்கோஸ் அளவை சமநிலையில வைக்க இது உதவுது.”